சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.106
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாறு இல் அவுணர் அரணம் பண் - வியாழக்குறிஞ்சி (திருஊறல் (தக்கோலம்) உமாபதீசுவரர் உமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yn1AREaeV-8 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.106  
மாறு இல் அவுணர் அரணம்
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருஊறல் (தக்கோலம்) ; (திருத்தலம் அருள்தரு உமையம்மை உடனுறை அருள்மிகு உமாபதீசுவரர் திருவடிகள் போற்றி )
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று, நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே. | [1] |
மத்தமதக்கரியை, மலையான்மகள் அஞ்ச, அன்று, கையால் மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து, ஒளிர் நீலம் நாளும் நயனம் ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே. | [2] |
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார், நன்றும் கான் அமர் மான்மறிக் கைக் கடவுள், கருதும் இடம் வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து, அழகு ஆர், நம்மை ஊனம் அறுத்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே. | [3] |
நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும், அனலும், அன்று, கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில் மை அணி கண் மடவார்பலர் வந்து இறைஞ்ச, மன்னி நம்மை உய்யும் வகை புரிந்தான்-திரு ஊறலை உள்குதுமே. | [4] |
எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும், பண்டு, கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் கொண்டல்கள் தங்கு பொழில் குளிர்பொய்கைகள் சூழ்ந்து, நஞ்சை உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே. | [5] |
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும், கலங்கி, மறுக்கு உறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று ஒறுத்து, அருள் செய்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே. | [6] |
நீரின் மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது, அன்று, தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச, மகிழ்ந்து, ஆகம் ஊரும் அரவு அசைத்தான்-திரு ஊறலை உள்குதுமே. | [7] |
பொன் இயல் சீவரத்தார், புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர், என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகு ஆர், தன்னை உன்ன வினை கெடுப்பான்-திரு ஊறலை உள்குதுமே. | [8] |
கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல், நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே. | [9] |